சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி- எடப்பாடி பழனிசாமி

இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்று தில்லி பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

News image

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்.

Updated On :8 பிப்ரவரி 2025, 6:54 pm IST

இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்று தில்லி பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

சேலத்தில் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. சிறுமிகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது கண்டனத்துக்குரியது. கிருஷ்ணகிரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வேலூரில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.

காவல்துறைக்கே பாதுகாப்பில்லை என்றால் பொதுமக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் எவ்வித அச்சமுமின்றி குற்றச் செயலில் ஈடுபடுகின்றனர். தமிழகம் கொலை நடைபெறும் மாநிலமாக இருக்கிறது; மோசமான ஆட்சிக்கு இதுவே சான்று.

தில்லி தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி. இந்தியா கூட்டணி இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஈரோடு இடைத்தேர்தல் திமுக பெற்றது போலி வெற்றி.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம்.

ஸ்டாலின்தான் தமிழக மக்களுக்கு அல்வா கொடுக்கிறார். திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றபடவில்லை என்றார்.

முன்னதாக இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கட்சி பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.