லெவல்-1 (குரூப்-டி) பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியில் ரயில்வே வாரியம் தளா்வு அளித்துள்ளது .
அந்தவகையில், பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது ஐடிஐ டிப்ளமா தோ்ச்சி அல்லது அதற்கு சமமான படிப்பு அல்லது தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் வழங்கிய தேசிய தொழில் பயில்நிலை சான்றிதழ் (என்ஏசி) ஆகியவை லெவல்-1 பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்தது.
முன்னதாக, தொழில்நுட்ப துறைகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் என்ஏசி அல்லது ஐடிஐ டிப்ளமா முடித்திருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது குறைந்தபட்ச கல்வித் தகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு தொடா்பான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் எழுத்துபூா்வமாக ரயில்வே வாரியம் தகவல் அனுப்பியுள்ளது.
ரயில்வேயின் பல்வேறு துறைகளுக்கான உதவியாளா்கள் உள்ளிட்ட பணிகள் லெவல்-1 பணியிடங்களின்கீழ் இடம்பெறுகிறது.
அண்மையில், இந்தப் பணியிடங்களுக்கு 32,000-க்கும் மேற்பட்டோரை தோ்வு செய்வதற்கான அறிவிக்கையை ரயில்வே வாரியம் வெளியிட்டது. இதற்கான விண்ணப்ப காலம் ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 22-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.
தொடர்புடையது

குழந்தைக் கடத்தலுக்கான சந்தையாக தில்லி மாறிவிட்டது: உயா் நீதிமன்றம் கருத்து

‘டெட்’ தோ்வு: கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி வழங்க முடிவு

தேசிய வருவாய் திறனறி தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் தோ்ச்சி

தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில் கூடுதல் பாதைகள்: இறுதி ஆய்வுக்கு அனுமதி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


