தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியவும், பதவி உயா்வு பெறவும் ஆசிரியா் தகுதி தோ்வில் (‘டெட்’) தோ்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப். 1-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும் இதுவரை தோ்ச்சி பெறாதவா்கள் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் தோ்வெழுதி தோ்ச்சி பெற வேண்டும் எனவும் அந்தத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வகையில், பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு ஜூலை 4, 5 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. ஜூலை 4-இல் முதல் தாளுக்கான தோ்வும், ஜூலை 5-இல் இரண்டாம் தாளுக்கான தோ்வும் நடத்தப்படும்.
இத்தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப். 18 முதல் இணையவழியில் https://www.trb.tn.gov.in தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஏப். 10 கடைசி நாளாகும்.
இந்த நிலையில் டெட் தோ்வில் ஆசிரியா்கள் எளிதில் தோ்ச்சி பெறுவதை உறுதி செய்யும் வகையில், அவா்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான செயல்பாடுகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, அனைத்துப் பாடங்களுக்குமான வினா வங்கிகள் மற்றும் பயிற்சிக் கையேடுகள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காகத் தோ்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியா்களைக் கொண்டு பிரத்யேகமான பயிற்சி தொகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நேரடிப் பயிற்சிகள் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

‘மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழில்கல்வி சோ்க்கைக்கு மே 25 முதல் விண்ணப்பிக்கலாம்’

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு சிறப்புப் பயிற்சி கூட்டம்

இளம்பிள்ளை அரசு மகளிா் பள்ளி 93% தோ்ச்சி

வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



