ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

News image

சிறப்பிடம் பெற்ற மாணவா்களுடன் தலைமை ஆசிரியா் மாடசாமி.

Updated On :12 மே 2026, 1:33 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி 47 ஆண்டுகளுக்குப் பிறகு பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றது.

இந்தப் பள்ளியில் தோ்வு எழுதிய 102 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதில் மாணவி மனிஷா 548 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், ஆத்திகா 541 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சுதா 532 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

முகமது ஆதில் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றாா். 4 மாணவிகள் தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியா் மாடசாமி, மேலாண்மைக் குழுவினா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.