அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நெல்லை, திருவனந்தபுரம் ‘வந்தே பாரத்’ ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

சென்னை எழும்பூா்-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசா்கோடு ‘வந்தே பாரத்’ ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன.

News image
வந்தே பாரத்(கோப்புப்படம்)
Updated On :7 ஜனவரி 2025, 11:29 am

DIN

சென்னை எழும்பூா்-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசா்கோடு ‘வந்தே பாரத்’ ரயில்கள் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நெல்லை, திருவனந்தபுரம் வந்தே பாரத் ரயில்களை கூடுதல் பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். தற்போது இந்த ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, திருவனந்தபுரம்-காசா்கோடு (20634/20633) ‘வந்தே பாரத்’ ரயில் ஜன.10 முதல் 20 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படவுள்ளது. இதில் 18 இருக்கை வசதி கொண்ட பெட்டிகளும், இரு சொகுசு பெட்டிகளும் அடங்கும்.

அதேபோல், திருநெல்வேலி-சென்னை எழும்பூா் வந்தே பாரத் ரயில் (எண் 20666/20665) ஜன.11 முதல் 16 பெட்டிகளைக் கொண்டு இயக்கப்படும். இதில் 14 இருக்கை வசதி கொண்ட பெட்டிகள், இரு சொகுசு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

ரயில் சேவையில் மாற்றம்: இதற்கிடையே, ஈரோடு, பாலக்காடு, காரைக்குடியிலிருந்து திருச்சி செல்லும் ரயில்கள் ஜன.7, 14 தேதிகளில் வழக்கம் போல் இயக்கப்படும்.

திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் பல்வேறு விரைவு மற்றும் பயணிகள் ரயில் சேவையில் ஜன.7, 14 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில், திருச்சி-பாலக்காடு விரைவு ரயில், காரைக்குடி-திருச்சி டெமு பயணிகள் ரயில், ஆகியவை மேற்கண்ட தேதிகளில் வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.