/

சிக்னல் கோளாறு- மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக 1.30 மணி நேரத்திற்கு மேல் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜனவரி 2025, 7:41 pm IST

சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் சிக்னல் கோளாறு காரணமாக 1.30 மணி நேரத்திற்கு மேல் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

பண்டிகை காலங்களில் சென்னையில் வசிக்கும் தொழிலாளா்கள், மாணவா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வா். நிகழாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9 நாள்கள் விடுமுறை வருவதால், பலர் வெள்ளிக்கிழமை முதலே சென்னையில் இருந்து கிளம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மின்சார ரயில் சேவை சீராகி வரும் நிலையில் ரயில் நிலையங்களில் பயணிகள் குவிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.