அரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்!

சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது பற்றி...

News image

தாம்பரம் ரயில் நிலையம் - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 11:03 am IST

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில் வழித்தடமானது புறநகர்ப் பகுதிகளை சென்னையுடன் இணைப்பதால் நாள்தோறும் 8 லட்சம் பயணிகள் வரை இந்த வழித்தடத்தில் பயணிக்கிறார்கள்.

இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று காலை தீடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் நெரிசல்மிகு நேரத்தில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கிட்டத்திட்ட 30 நிமிடங்களுக்கு மேலாக பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார ரயில்களும் சில விரைவு ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் அலுவலகத்திற்கு, செல்லக்கூடிய பெரும்பாலான பயணிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

சிக்னல் கோளாறை சரிசெய்யும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், தாம்பரத்தில் இருந்து மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் அனைத்து மின்சார ரயில்களும் மிக தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

Summary

Signal failure at Tambaram! Electric trains halted mid-journey!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.