மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்!

புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

News image

காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்...

Updated On :17 ஜனவரி 2025, 5:31 am

புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் பொங்கல் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Story image

காளைகள் விறுவிறுப்பாக வாடிவாலில் இருந்து சீறிப்பாய்ந்து வருகின்றன. காளையர்கள் அவற்றைப் போட்டி போட்டுக் கொண்டு தழுவ முயற்சித்து வருகின்றனர்.

ஒரு காளையும் அதனைத் தழுவ முயற்சித்த காளையரும் உருண்டுபுரண்ட சம்பவம் மெய்சிலிர்க்கச் செய்தது.

Story image

பிற்பகல் 3 மணி வரைரை சுமார் 600 காளைகள் அவிழ்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 230 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.