டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆர்.என். ரவியே ஆளுநராக தொடர வேண்டும்: மு.க. ஸ்டாலின்

தமிழகத்துக்கு ஆர்.என். ரவியே ஆளுநராகத் தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என ஸ்டாலின் பேச்சு

News image
ஆளுநர் ஆர்.என். ரவி - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :24 ஜனவரி 2025, 7:13 am

DIN

சென்னை: தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியே தொடர வேண்டும் என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று, மாற்றுக் கட்சியினர் சுமார் 3,000 பேர் திமுகவில் இணையும் மிகப்பெரிய நிகழ்ச்சி நடைபெற்றது. திமுகவில் இணைந்தவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் வரவேற்று திமுக துண்டை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த 51 நிர்வாகிகளும், பெரியார் சிலையை ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசாக வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அடுத்த முறையும் தனது உரையைப் படிக்காமல் ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேற வேண்டும். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவர் பேசும் பேச்சுதான் திமுகவை வளர்க்கிறது. அதனால்தான் இந்த ஆளுநரே தமிழகத்தில் தொடர வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, தமிழக சட்டப்பேரவையில், ஆளுநரை உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.