மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆர்.என். ரவியே ஆளுநராக தொடர வேண்டும்: மு.க. ஸ்டாலின்

தமிழகத்துக்கு ஆர்.என். ரவியே ஆளுநராகத் தொடர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன் என ஸ்டாலின் பேச்சு

News image

ஆளுநர் ஆர்.என். ரவி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :24 ஜனவரி 2025, 7:12 am

சென்னை: தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியே தொடர வேண்டும் என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று, மாற்றுக் கட்சியினர் சுமார் 3,000 பேர் திமுகவில் இணையும் மிகப்பெரிய நிகழ்ச்சி நடைபெற்றது. திமுகவில் இணைந்தவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் வரவேற்று திமுக துண்டை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த 51 நிர்வாகிகளும், பெரியார் சிலையை ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசாக வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அடுத்த முறையும் தனது உரையைப் படிக்காமல் ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேற வேண்டும். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவர் பேசும் பேச்சுதான் திமுகவை வளர்க்கிறது. அதனால்தான் இந்த ஆளுநரே தமிழகத்தில் தொடர வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, தமிழக சட்டப்பேரவையில், ஆளுநரை உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.