காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூர் பகுதியில் மறு நடவு செய்யப்பட்டு, துளிர்த்துவந்த அரச மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவன் நகர் பகுதியில் நூற்றாண்டுகளைக் கடந்த 40 டன் எடை கொண்ட அரசமரத்தை அகற்ற வீட்டின் உரிமையாளர் முடிவு செய்து, பசுமை ஆர்வலர் மேகநாதன் மற்றும் விழுதுகள் அமைப்பினரிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.
இது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஜேசிபி, 4 ராட்சத கிரேன் மற்றும் ட்ரெய்லர் லாரி உதவியுடன் ஆலமரம் வேருடன் எடுக்கப்பட்டு சுமார் 2 லட்சம் மதிப்பில் செலவு செய்து காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதிக்கு எடுத்து சொல்லப்பட்டு சாலை ஓரம் கடந்த 13.05.2024ல் மறு நடவு செய்யப்பட்டது.
மேலும் அது மீண்டும் வளர்ச்சி பெற தேவையான பணிகளையும் தொடர்ச்சியாக கடந்த ஓராண்டாக பசுமை ஆர்வலர்கள் செய்து வந்தனர். மரம் காய்ந்துவிடக் கூடாது என்று ஈரமான கோணிகளை அதன் மீது போட்டுவைத்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வந்த நிலையில், மரம் துளிர் விட ஆரம்பித்ததால் பசுமை ஆர்வலர்களும் அவ்வழியே செல்பவர்களும் மகிழ்ச்சியுற்றனர்.
இந்நிலையில் நேற்று திடீரென அந்த ஆலமரத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் தீ கொழுந்து விட்டு எரிந்து முற்றிலும் மரம் சேதமடைந்தது.
இது குறித்து உடனடியாக தகவல் அறிந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையிலும், மரம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்த செயல் பசுமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதற்கு தீ வைக்கும் அளவிற்கு கொடிய மனம் கொண்ட நபர்களின் மனநிலை வேதனை அளிப்பதாகவும், பசுமை ஆர்வலர் மேகநாதன் தெரிவித்தார்.
இப்பணிக்காக நூற்றுக்கணக்கானவர்கள், தங்களது ஓய்வு நேரத்திலும் பணி செய்த நிலையில் மரம் துளிர்விட்ட நிலையில், தீ வைத்திருப்பது, மனதிற்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
Summary
Green activists are shocked to learn that mysterious individuals set fire to a replanted and budding royal tree in the Kilkkadirpur area near Kanchipuram.
இதையும் படிக்க.. மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை: வைகோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி.: அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா!

உ.பி.யில் அனுமன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



