காஞ்சிபுரம் அருகே மரச்சாமான்கள் தொழிற்சாலையில் தீ விபத்து !
காஞ்சிபுரம் அருகே வெள்ளைகேட் பகுதியில் மரச்சாமான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


காஞ்சிபுரம் அருகே வெள்ளைகேட் பகுதியில் மரச்சாமான்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இத்தொழிற்சாலையில் 15 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மரப் பொருட்களை உற்பத்தி செய்யும் போது மீதமுள்ள மரத்துண்டுகள், உடைந்த பலகைகள் பெரிய அளவில் சேகரிக்கப் பட்டிருந்தன.
அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான மரப் பொருட்கள் சேதம் அடைந்தன.
வட மாநில தொழிலாளர்கள் சமையல் செய்யும்போது தீப்பொறி பட்டு மரச்சாமான்களில் தீப்பிடித்திருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை. சம்பவம் தொடர்பாக பொன்னேரிக் கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...