மக்களவையில் கீழடி விவகாரம் குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்தும் தொல்லியல் நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் பணியிட மாற்றம் குறித்தும் திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மத்திய கலாசாரத்துறை அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
அதில், “அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு மதிப்பாய்வு செய்ததா? அப்படியென்றால், அறிக்கை நிராகரிப்புக்கு காரணம் என்ன? அகழ்வாராய்ச்சி முடிவதற்குள் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டது ஏன்? கீழடி அகழ்வாராய்ச்சியின் முழு அறிக்கை வெளியிடுவதற்கு தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நிபுணர் குழுமை அமைக்க மத்திய அரசு உறுதி அளிக்குமா?” எனக் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
“தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ள குறிப்பிட்ட காலங்கள் எடுக்கலாம். அந்த காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் தலைமை தாங்கியிருக்கலாம். அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகள் தொல்லியல் துறை நிபுணர்களால் சரிபார்க்கப்படுகிறது. அதன்பின்னர், அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும்.
கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் மதிப்பாய்வில் உள்ளது. நிபுணர்களின் கருத்துகள் ஆராய்ச்சியாளருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. அறிக்கை குறித்து இன்னும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை.
அறிக்கையை நிராகரிக்கவில்லை. கீழடியில் மத்திய தொல்லியல் துறை மற்றும் கல்வி நிறுவனங்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடியில் அகழ்வாராய்ச்சியை நடத்தி வருகின்றது.
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், நிர்வாகக் காரணங்களால்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கீழடி அகழ்வாராய்ச்சியின் துல்லியமான கண்டுபிடிப்புகள் சட்டப்படி, உரிய அறிவியல் செயல்முறையைப் பின்பற்றி வெளியிடப்படும் என்று தொல்லியல் துறை உறுதி அளிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Union Culture Minister Gajendra Singh Shekhawat has responded to written questions raised by DMK MP Tamilachi Thangapandian in the Lok Sabha regarding the Keezhadi issue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை: 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட எலும்புக்கூடுகள், கடல் சங்கு மணிகள் கண்டெடுப்பு
லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

மண்ணின் கதைகளையும் வரலாற்றையும் அடையாளப்படுத்த வேண்டியது அவசியம்
கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



