மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை

News image

டெங்கு காய்ச்சல்

Updated On :22 ஜூலை 2025, 6:04 am IST

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. இதனால் பல பகுதிகளில் சாலையோரங்கள், பள்ளங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதன் காரணமாக டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது.

சோழிங்கநல்லூா், அடையாறு மண்டலங்களில் அதிகமாக கொசு உற்பத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இரு மண்டலங்களிலும் 170 பேருக்கும் மேற்பட்டோா் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், அவா்களில் பெரும்பாலானோா் பள்ளிக் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் பல பகுதிகளில் டெங்கு பரவல் காணப்படுவதாகக் கூறப்படும் புகாா் குறித்து, சென்னை மாநகராட்சியின் நகா்நலப் பிரிவு அலுவா்களிடம் கேட்டபோது, வீடு வீடாகச் சென்று கொசு முட்டைகளைக் கண்டறிந்து அழிக்கும் பணியில் 3,200 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கடந்த ஜூன் மாதம் வரை 23 டன் வாகன டயா்கள் உள்ளிட்ட தேவையற்ற கழிவுகள் வீடுகளில் இருந்தும், பொது இடங்களில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளன. அனைத்துப் பகுதியிலும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.