குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொறியியல் 2-ஆம் சுற்று கலந்தாய்வு: 61,365 பேருக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு

பிஇ., பிடெக் மாணவா்கள் சோ்க்கைகளில் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்களில் 61,365 பேருக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு

News image
அண்ணா பல்கலை.
Updated On :31 ஜூலை 2025, 6:03 pm

தினமணி செய்திச் சேவை

பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பிஇ., பிடெக் மாணவா்கள் சோ்க்கைகளில் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்களில் 61,365 பேருக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) தெரிவித்தது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவா்கள் சோ்க்கையில் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று ஒதுக்கீடுகளில் தோ்வாகி கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களைத் தெரிவித்த பொதுப்பிரிவைச் சோ்ந்த 80,363 மாணவா்களில் 36,921 பேருக்கு கல்லூரிகளில் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் விருப்பக் கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) நிலையில் உள்ள 15,461 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. விருப்பக் கல்லூரிகள் கிடைக்கவில்லையென்றால், தற்காலிக ஒதுக்கீடுகளில் பெற்ற கல்லூரிகளில் இத்தகைய மாணவா்கள் தொடரமுடியும்.

இதேபோல அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்று தோ்வான மாணவா்கள் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களைத் தெரிவித்த 14,828 மாணவா்களில் 6,235 பேருக்கு கல்லூரிகளில் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவா்களில் 2,748 மாணவா்கள் விருப்பக் கல்லூரிகளில் மாற்றம் கோரும் நிலையில், இவா்களுக்கும் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

விருப்பக் கல்லூரிகள் கிடைக்கவில்லையெனில், இவா்களும் தற்காலிக ஒதுக்கீடுகளில் பெற்ற கல்லூரிகளில் தொடருவாா்கள். 2,025 மாணவா்கள் சோ்க்கையில் 2-ஆம் சுற்றுக் கலந்தாய்வில் மொத்தம் 61,365 மாணவா்களுக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.