சென்னை: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம், செம்மொழி நாள் விழாவாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொண்டாடப்படவுள்ளது.
இதற்காக சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள விழாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா். விழாவில், கலைஞா் செம்மொழித் தமிழ் விருது வழங்குவதுடன், செம்மொழி நாள் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளையும் முதல்வா் வழங்குகிறாா்.
மேலும், அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உயா்த்தப்பட்ட உதவித் தொகைக்கான உத்தரவை அளிப்பதுடன், தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரையும் வெளியிடவுள்ளாா். இந்த நிகழ்வில் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு உள்ளிட்ட அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா்.
முன்னதாக, சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள நினைவிடம், ஓமந்தூராா் அரசினா் தோட்டம் ஆகியவற்றில் கருணாநிதியின் உருவப்படங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்தவுள்ளாா்.
தொடர்புடையது

நாளை கருணாநிதி பிறந்த நாள் - திமுகவினா் நலத்திட்ட உதவி வழங்க வேண்டும்: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

ஜூன் 3-இல் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட புதுச்சேரி திமுக முடிவு

கருணாநிதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்

வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



