தொகுதி மறுசீரமைப்பு குறித்து அதிமுக எந்த வகையிலும் பேசவில்லை என்று அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.
அவரின் கருத்தை விமர்சித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பூச்சாண்டி வேலையைத்தான் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார் என்று கூறினார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கருத்தைக் குறிப்பிட்டு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பாஜகவுடனான கள்ளக் கூட்டணியை நல்ல கூட்டணியாக்க தில்லிக்கு போனவர், தொகுதி மறுசீரமைப்பு பற்றிப் பேசினேன் என இன்றைக்குப் புதுக்கதை பேசுகிறார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பாஜகவின் அடிமைபோல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். ஏதேனும் ஒரு வகையிலாவது, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அதிமுக பேசியிருக்கிறதா?
மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன் என்று கலர் கலராக ரீல் விடுகிறார் அவர். கமலாலயத்தின் கருத்தை, தன்னுடைய கருத்தாக பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

6-ஆவது வெற்றியை எதிர்நோக்கும் இபிஎஸ்!

ஈரோட்டில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தொகுதி மறுசீரமைப்பு - முதல்வா் பொய்ப் பிரசாரம் செய்ய வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


