தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 18) சென்னை வேளச்சேரி அக்வாடிக் ஜிம்னாஸ்டிக் பாட்மிட்டன் (ஏஜிபி) விளையாட்டு வளாகத்தில் ரூ. 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டு வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவதை பார்வையிட்டார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடங்கள் குளிரூட்டப்பட்டு, புதிய உபகரணங்கள் வாங்கி பொருத்திடவும், நவீன முறையில் சீரமைக்கவும் 9 கோடியே 78 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அக்வாடிக் ஜிம்னாஸ்டிக் பாட்மிட்டன் (ஏஜிபி) விளையாட்டு வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வகையான அதிநவீன உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்தப்பட்டு குளிர்சாதன வசதியுடன் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி ஏ.ஜி.பி.நீச்சல் குள வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு துணை முதலமைச்சர், விடுதியில் தங்கியுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சமைக்கப்பட்ட மதிய உணவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விளையாட்டு வீராங்கனைகளுக்கான விடுதியில் அவர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு, மேலும் அவர்கள் பெற்று வரும் பயிற்சி குறித்தும், கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள் குறித்தும் கலந்துரையாடி, பதக்கங்கள் வெல்ல வாழ்த்து தெரிவித்தார்.
நீச்சல் குள வளாகத்தில் பல்வேறு உயரங்களில் இருந்து வெவ்வேறு முறைகளில் டைவ் அடித்து நீருக்குள் குதிக்கும் விளையாட்டில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவதையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பார்வையிட்டார்.
இதையும் படிக்க: ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசத்தில் கட்டப்பட்டுள்ள நவீன இறைச்சிக் கூடத்தை விரைந்து திறக்க பொதுமக்கள் எதிா்பாா்ப்பு

நார்வே செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை!

குளிரூட்டப்பட்ட மீன் ஏற்றுமதி தொடக்கம்

துணை ராணுவப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



