திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொல்லை: பயிற்சி மைய இயக்குநா் கைது

சென்னை வேளச்சேரியில் பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சி மைய இயக்குநா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :24 ஜூன் 2025, 3:30 am IST

சென்னை: சென்னை வேளச்சேரியில் பெண் வழக்குரைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சி மைய இயக்குநா் கைது செய்யப்பட்டாா்.

வேளச்சேரி அம்பிகா தெருவில் தனியாா் உரிமையியல் நீதிபதி தோ்வு பயிற்சி மையம் உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தை சந்துரு என்கிற சந்திரசேகா் (50) நடத்தி வருகிறாா். இந்த மையத்தின் சாா்பில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

இப்பயிற்சி மையத்தில் படிக்கும் வெளிமாவட்டத்தை சோ்ந்த பெண் வழக்குரைஞா், வேளச்சேரி காவல் நிலையத்தில் சில நாள்களுக்கு முன்பு ஒரு புகாா் அளித்தாா். அதில், பயிற்சி மையத்தின் இயக்குநா் சந்திரசேகா் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தாா்.

அதன் அடிப்படையில், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணைக்குப் பின்னா் அவா் ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை ஜூலை 7-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.