மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் காய்கறி விலை குறைந்துள்ளது. இது ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!

News image
காய்கறி விலை நிலவரம்- EPS
Updated On :3 மார்ச் 2025, 8:21 am

DIN

கடந்த டிசம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை சதத்தைத் தொட்டுவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெங்காயம், தக்காளி என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

பிப்ரவரி வரை, காய்கறிகளின் விலை உயர்வால், மாத பட்ஜெட்டில் பெரிய துண்டு விழுந்திருந்த நிலையில், மார்ச் மாதத்தில், விலை குறைந்து பணத்தை மிச்சப்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.50க்கு விற்பனையான காய்கறிகளின் விலை தற்போது கிலோ ரூ.15-20 க்கு விற்பனையாகி வருகிறது. இதனால், ஒருபக்கம் விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனைப்பட்டாலும், காய்கறிகளை வாங்கும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதற்குக் காரணமாகக் கூறப்படுவது என்னவென்றால், கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள் ஒன்றுக்கு தற்போது 800 முதல் 900 லாரிகளில் காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன. வரத்து அதிகரித்திருப்பதால் காய்கறிகளின் விலைகள் குறைந்துள்ளது.

ஆனால், மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த டிசம்பரில் 600 லாரிகள் மட்டும்தான் வந்தது. அதனால், காய்கறிகளின் விலை அதிகமாக இருந்தது.

அப்போது ஒரு கிலோ காய்கறி விலை ரூ.40 வரை இருந்தது. இது சில்லறை விற்பனைக்கு வரும்போது இரண்டு மடங்கு வரை விற்பனையாகி வந்த நிலையில், கோயம்பேட்டில் தற்போது ரூ.15 - 20க்கு காய்கறிகள் விற்பனையாவதால், சில்லறை விற்பனையிலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய விலை நிலரப்படி, தக்காளி ஒரு கிலோ ரூ.15க்கும், முருங்கை ஒரு கிலோ ரூ.40க்கும் விற்பனையாகி வருகிறது.

முள்ளங்கி, கோஸ் போன்றவை தலா கிலோ ரூ. 8க்கும், பீட்ரூட், கத்தரிக்காய், அரைக்காய் போன்ற காய்கறிகள் கிலோ ரூ.10க்கும் விற்பனையாகி வருவதாகக் கூறப்படுகிறது.

பெரிய வெங்காயம் விலை கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.20 வரை விலை குறைந்திருந்தாலும், சில்லறை விற்பனை கடைகளில் விலையைக் குறைக்க மனமில்லாமல், வியாபாரிகள் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்து வருகிறார்கள்.

ஆனால், இந்த நிலை மார்ச் மற்றும் ஏப்ரல் வரை மட்டுமே நீடிக்கும் என்றும், கோடை வெப்பம் காரணமாக மீண்டும் விலை உயரும் என்றும் காய்கறி வியாபாரிகள் கூறியுள்ளனர். எனவே, இதனை இல்லத்தரசிகள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.