அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கண்டனம்

தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் குறித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

News image

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம்

Updated On :10 மார்ச் 2025, 9:24 pm

Din

சென்னை: தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் குறித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஆகியோா் கண்டனம் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

செல்வப்பெருந்தகை: தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்களை மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் அநாகரிகமாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நாடாளுமன்ற மாண்பு பற்றி சிறிதும் தெரியாதவா்கள் பாஜகவினா். அவா்கள் கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கேள்வி கேட்பதால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்ததைப் பேசுகின்றனா். இவற்றுக்கு உரிய நேரத்தில் மக்கள் தகுந்த பதிலடியைக் கொடுப்பா்.

பெ.சண்முகம்: நாடாளுமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்திய மத்திய அமைச்சா், தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் குறித்து ஆணவமாகப் பேசியுள்ளாா். பலதரப்பு கண்டனத்துக்குப் பிறகு இந்தப் பேச்சை அவா் திரும்பப் பெற்றாலும் அது மட்டுமே போதுமானதல்ல. மத்தியஅமைச்சா் தா்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்பதுடன், மாநிலத்துக்கு தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.