விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வைகை, பல்லவன் ரயில்களில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைப்பு!

முன்பதிவில்லாத பெட்டி இணைப்பு தொடர்பாக...

News image

கோப்புப்படம்

Updated On :13 மார்ச் 2025, 8:21 pm IST

வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயில்களில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மதுரை - சென்னை எழும்பூர் இடையேயான வைகை விரைவு ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 11 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை விரைவு ரயில், காரைக்குடி - எழும்பூர் இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 12 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத இணைக்கப்படும் நிலையில், இரண்டும் ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட தனி இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.