தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வைகை, பல்லவன் ரயில்களில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைப்பு!

முன்பதிவில்லாத பெட்டி இணைப்பு தொடர்பாக...

News image

கோப்புப்படம்

Updated On :13 மார்ச் 2025, 2:51 pm

DIN

வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயில்களில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மதுரை - சென்னை எழும்பூர் இடையேயான வைகை விரைவு ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 11 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை விரைவு ரயில், காரைக்குடி - எழும்பூர் இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 12 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத இணைக்கப்படும் நிலையில், இரண்டும் ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட தனி இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.