இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோவை அருகே எரிந்த நிலையில் பெண் சடலம்: அடையாளம் தெரிந்தது

கோவை அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் கைப்பற்றப்பட்ட நிலையில், அவரது அடையாளம் தெரிந்தது.

News image
கோவை அருகே
Updated On :19 மார்ச் 2025, 12:38 pm

DIN

கோவை: கோவை அருகே, பாதி உடல் எரிந்த நிலையில், பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது அடையாளம் காணப்பட்டுள்ளது.

கோவையில், இன்று காலை, பாதி எரிந்த நிலையில், ஒரு பெண்ணின் உடலைப் பார்த்த மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலைக் கைப்பற்றிய காவல்துறை, உடல் கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அக்கம் பக்கத்தில் யாரேனும் காணாமல் போனதாக புகார் அளித்தவர்களின் விவரங்களை எடுத்து, அவர்களை அழைத்து கொலையானவரின் அடையாளத்தைக் கண்டறிய முயற்சி எடுக்கப்பட்டது.

அதில், ஒரு பெண் காணாமல் போனதாக மகன், மகள் அளித்த புகாரில் தொடர்புடைய பெண்தான் சடலமாக மீட்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது.

பெண் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் சந்தேக மரணம் என்ற அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் ஆசிரியராக பணியாற்றி வந்ததும், அவரை நேற்று முதல் காணவில்லை என அவரது மகன் மற்றும் மகள் தெரிவித்திருந்த நிலையில் காவல்துறையினர், புகாரின் அடிப்படையில் தேடி வந்த நிலையில் இன்று காலை காணாமல் போன ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று ஆசிரியர் பயணித்த வாகனம் மட்டும் கிடைத்த நிலையில், அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஆசிரியர் பயணித்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

அவருக்கு பல பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவையெல்லாம் விசாரணையில் உறுதிப்படுத்தாமல் வெளியில் தெரிவிக்க முடியாது.

தற்போதைக்கு சந்தேகம் மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.