
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு லட்சக்கணக்கில் மதிப்புள்ள தரமில்லாத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பொருள்களின் தரத்தினை சோதிக்கும் மத்திய தர நிர்ணய அதிகாரிகள் இன்று திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் உள்ள அமேசான் சேமிப்புக் கிடங்கில் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல கொடுவள்ளி பகுதியில் உள்ள ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்கிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு தரமில்லாத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பிஐஎஸ் முத்திரை இல்லாத குடிநீர் பாட்டில்கள், பொம்மைகள், சீலிங் ஃபேன்கள் என தரமில்லாத ரூ. 36 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தகத் தளங்களின் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் கடந்த சில நாள்களாக சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை: மக்கள் அதிர்ச்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.