6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவள்ளூர் அமேசான், ஃபிளிப்கார்ட் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை! தரமில்லாத பொருள்கள் பறிமுதல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை

News image
Updated On :20 மார்ச் 2025, 6:28 am

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு லட்சக்கணக்கில் மதிப்புள்ள தரமில்லாத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பொருள்களின் தரத்தினை சோதிக்கும் மத்திய தர நிர்ணய அதிகாரிகள் இன்று திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் உள்ள அமேசான் சேமிப்புக் கிடங்கில் சோதனை மேற்கொண்டனர்.

அதேபோல கொடுவள்ளி பகுதியில் உள்ள ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்கிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு தரமில்லாத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பிஐஎஸ் முத்திரை இல்லாத குடிநீர் பாட்டில்கள், பொம்மைகள், சீலிங் ஃபேன்கள் என தரமில்லாத ரூ. 36 லட்சம் மதிப்புள்ள பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தகத் தளங்களின் சேமிப்புக் கிடங்குகளில் அதிகாரிகள் கடந்த சில நாள்களாக சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.