45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

எரிபொருள் குறைவால் தில்லி - பெங்களூரு விமானம் சென்னையில் தரையிறக்கம்

எரிபொருள் குறைவாக இருந்ததால் டெல்லியிலிருந்து பெங்களூரு வந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :24 மார்ச் 2025, 10:04 pm

Din

சென்னை: எரிபொருள் குறைவாக இருந்ததால் டெல்லியிலிருந்து பெங்களூரு வந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லியிலிருந்து பெங்களூருக்கு ஏா் இந்தியா விமானம், 172 பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எரிபொருள் மிகவும் குறைவாக இருப்பதாக சமிக்ஞை வந்தது. இதையடுத்து, விமானத்தை பெங்களூரு சென்று தரையிறக்குவதில் பிரச்னை ஏற்படலாம் என்பதால், இதுகுறித்து விமானி, தலைமை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, தலைமை விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில், பெங்களூரு செல்லவேண்டிய அந்த விமானம், திங்கள்கிழமை பிற்பகல் 12.54-க்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டது.

அதன் பின்னா் பிற்பகல் 2 மணிக்கு, சென்னையிலிருந்து ஏா் இந்தியா விமானம் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்று, பிற்பகல் 2.50-க்கு பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறங்கியது. இதனால் சுமாா் 2 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.