இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள் வியாழக்கிழமை காலை சென்னை வந்தடைந்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் குற்றச்சாட்டுக்காக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிப். 20 மற்றும் 22 ஆம் தேதிகளில் கைது செய்யப்பட்ட 7 மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்து விடுவித்தது.
இதனைத் தொடர்ந்து, இலங்கையில் இருந்து விமானம் மூலம் 7 மீனவர்களும் சென்னை விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தடைந்தனர்.
அவர்களை தமிழக அரசு தரப்பில் அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு வாகனம் மூலம் அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : வீர தீர சூரன் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இணையவழி குற்றம்: இலங்கையில் 173 இந்தியா்கள் கைது

இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்து வந்த தமிழக மீனவர்கள்!

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைப்பிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

