சென்னையில் மே 7-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை பள்ளிக்கரணையில் மே 7 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவிப்பு.
எடப்பாடி கே. பழனிசாமி
எடப்பாடி கே. பழனிசாமிகோப்புப் படம்
Updated on
1 min read

சோழிங்கநல்லூர் தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து மே 7 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குள்பட்ட இடங்களில் மக்களின் அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும், அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்காமலும் இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, மே 7 ஆம் தேதி(புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் பள்ளிக்கரணை பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டடம் அருகில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையிலும், சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.பி. கந்தன் முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com