மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சென்னை பெருநகர் ஊர்க்காவல் படையினர் 514 பேரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அணிவகுப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், ”1963 இல் தமிழக அரசால் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. அமைதி சட்ட ஒழுங்கு அடிப்படை பயிற்சி நிலை நாட்ட ஊர்க்காவல் படையினர் பயன்படுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்களை பாதுகாக்கவும், குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்றங்களை திறமையாக கண்டுபிடித்து தண்டனை வழங்கவும் காவல்துறையினர் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர்.
பொதுமக்கள் பார்வையில் ஊர்க்காவல் படை காவலர்களும் அதிகாரிகளே, ஆகவே காவல் துறைக்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படாதவாறு மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்துக் செயல்பட வேண்டும்.
தமிழ்நாடு காவல் துறையினருக்கு வழங்கப்படும் அனைத்து சிறப்புச் சலுகைகளும் ஊர்க்காவல் படை காவலர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் போரில் நாட்டிற்காக அயராது உழைத்து வரும் நம்முடைய இந்திய ராணுவ வீரர்களுக்கும் முப்படை வீரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி” என்று தெரிவித்தார்..
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:
தமிழக காவல்துறை சார்பில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக சேப்பாக்கம் திடலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜெய்சால்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! தேர்தல் ஆணையம் அதிரடி!!

திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும்: பாஜக புகார்

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

பேரவைத் தோ்தல்! சென்னை காவல் துறை தயாா்: காவல் ஆணையா் அருண்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


