மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழராக இருப்பதற்கு அருகதை அற்றவர்கள்: நயினார் நாகேந்திரன்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பாராட்டி, தமிழக பாஜக பேரணி நடத்தியது.

News image
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்- X | Annamalai
Updated On :16 மே 2025, 3:33 pm

DIN

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பாராட்டி, தமிழக பாஜக பேரணி நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கை வெற்றியைத் தொடர்ந்து, அதனைப் பாராட்டும் விதமாகவும், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தமிழக பாஜக சார்பில் பேரணி நடத்தினர்.

பேரணியைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்போர், தமிழர் என சொல்வதற்கு அருகதை அற்றவர்களே.

நாட்டுப்பற்று இல்லாதவர்கள், பாகிஸ்தானுக்கே செல்லுங்கள். காங்கிரஸார்கூட பாகிஸ்தானை எதிர்க்கின்றனர். ஆனால், நம் முதல்வர் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை

அவரைத் தொடர்ந்து, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது, எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. அதனால்தான், பாகிஸ்தானுக்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. நாம் போரை விரும்பவில்லை என்றாலும், போருக்கு தயாராகவே உள்ளோம்.

பாகிஸ்தான் நாட்டு மக்களுக்காகத்தான், இந்தமுறை நம் பிரதமர் மன்னித்துள்ளார். இருப்பினும், அமைதியா? போரா? என்பது பாகிஸ்தான் கையில்தான் இருக்கிறது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.