நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது?

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு அறிவிப்பு தொடர்பாக...

News image

அமைச்சர் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்) - ENS

Updated On :16 மே 2025, 10:27 am IST

10, 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 4 ஆம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.

சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர், “10, 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 4 ஆம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும். துணைத் தேர்வு அட்டவணை நாளை(மே 17)” வெளியிடப்படும். துணைத் தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 19 ஆம் தேதி முதல் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.” என்றார்.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியாகியுள்ள நிலையில், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் பிற்பகல் 2 மணிக்கு தெரிந்துகொள்ளலாம்.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 98.31% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.