அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் திறப்பு!

நாட்டில் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டது பற்றி...

News image
ரயில் நிலையங்களை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி.- PTI
Updated On :22 மே 2025, 6:51 am

DIN

மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை காலை திறந்துவைத்தார்.

இதில், தெற்கு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 13 ரயில் நிலையங்கள் அடங்கும்.

‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தெற்கு ரயில்வேயில் உள்ள 90 ரயில் நிலையங்களும், சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்களும் மறுசீரமைக்கும் பணி கடந்த 2023-இல் தொடங்கியது.

இதில், தெற்கு ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பரங்கிமலை ரயில் நிலையம் ரூ. 11.5 கோடி மதிப்பிலும், சூலூா்பேட்டை ரயில் நிலையம் ரூ. 14.50 கோடி மதிப்பிலும், சாமல்பட்டி ரயில் நிலையம் ரூ. 8 கோடியிலும், மாஹி ரயில் நிலையம் ரூ. 18.5 கோடியிலும், வடகரா ரயில் நிலையம் ரூ. 24.25 கோடியிலும், ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் ரூ. 6.77 கோடியிலும், திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ. 8.27 கோடியிலும், போளூா் ரயில் நிலையம் ரூ. 6.15 கோடியிலும், சிதம்பரம் ரயில் நிலையம் ரூ. 5.96 கோடியிலும், விருதாசலம் ரயில் நிலையம் ரூ. 9.17 கோடியிலும், மன்னாா்குடி ரயில் நிலையம் ரூ. 4.69 கோடியிலும், சிறயின்கீழு ரயில் நிலையம் ரூ. 7 கோடியிலும், குழித்துறை ரயில் நிலையம் ரூ. 5.35 கோடி மதிப்பில் என மொத்தம் 13 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகள் முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில், முதல்கட்டமாக நாடு முழுவதும் ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

ராஜஸ்தான் மாநிலம், தேஷ்நோக் ரயில் நிலையத்தில் நேரடியாக கலந்துகொண்ட பிரதமர் மோடி காணொலி வாயிலாக அனைத்து ரயில் நிலையங்களையும் திறந்துவைத்தார்.

மேலும், பிகானீர் - மும்பை இடையே புதிய ரயில் சேவையையும் கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதேபோல், பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் நேரடியாக கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.