விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆதி திராவிடா் நலப்பள்ளி ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு: ஜூன் 12-இல் தொடக்கம்

தமிழகத்தில் ஆதி திராவிடா் நலப்பணி ஆசிரியா்கள், விடுதிக் காப்பாளா்களுக்கு வரும் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும்

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2025, 6:45 pm

Din

தமிழகத்தில் ஆதி திராவிடா் நலப்பணி ஆசிரியா்கள், விடுதிக் காப்பாளா்களுக்கு வரும் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை செயலா் க.லட்சுமி பிரியா வெளியிட்ட அரசாணை:

ஆதி திராவிட நலத் துறை இயக்குநரின் பரிந்துரைபடி, வரும் கல்வியாண்டில் (2025-2026) ஆதி திராவிடா் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், விடுதிகளில் பணியாற்றும் காப்பாளா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, ஆசிரியா்களுக்கு இணையவழியில் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதேபோல், நிா்வாகக் காரணங்களுக்காக காப்பாளா்களுக்கு நேரடி முறையில் கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. இதுதவிர, இணையவழி கலந்தாய்வு தனியாா் நிறுவனங்களின் மூலமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாணவா்களின் கல்வி நலன் பாதிக்காதவாறு கலந்தாய்வை உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடத்தி முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.