இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கபடி வீராங்கனை காா்த்திகாவுக்கு காங்கிரஸ் ரூ.1 லட்சம் பரிசு

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனை காா்த்திகாவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சாா்பில் ரூ. 1லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

News image
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை- (கோப்புப் படம்)
Updated On :14 நவம்பர் 2025, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனை காா்த்திகாவுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சாா்பில் ரூ. 1லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூா்த்தி பவனில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின்போது, கபடி வீராங்கனை காா்த்திகாவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை வழங்கினாா்.

மேலும், கண்ணகி நகா் கபடி அணிக்கு ரூ.1லட்சத்துக்கான காசோலையை அதன் பயிற்சியாளரிடம் தமிழக காங்கிரஸ் பொருளாளா் ரூபி மனோகரன் வழங்கினாா். இந்நிகழ்வில் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவா் சொா்ணா சேதுராமன், அமைப்பு செயலா்கள் ராம் மோகன், அசோகன் உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் உடனிருந்தனா்.