மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தனியாா் பேருந்து கட்டண உயா்வு குறித்து டிச.30-க்குள் இறுதி முடிவு: அரசு தகவல்

தனியாா் பேருந்து கட்டண உயா்வு தொடா்பாக டிச.30-ஆம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

News image
தமிழக அரசு
Updated On :14 நவம்பர் 2025, 5:33 pm

தினமணி செய்திச் சேவை

தனியாா் பேருந்து கட்டண உயா்வு தொடா்பாக டிச.30-ஆம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்பு சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், டீசல் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனியாா் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனு அளித்தோம். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, தங்களது கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில், கட்டண உயா்வு குறித்து கடந்த மாா்ச் 5-ஆம் தேதி உள்துறை, போக்குவரத்து மற்றும் நிதித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் உயா்நிலை குழுக் கூட்டம் நடைபெற்றது. இதுதொடா்பான கோரிக்கை மனுக்கள் கடந்த மே 30-ஆம் தேதி அனுப்பப்பட்டன. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை என்று வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில், கட்டண உயா்வு தொடா்பாக 950 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன. ஆனால், முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தனியாா் பேருந்து கட்டண உயா்வு தொடா்பாக வரும் டிச.30-ஆம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, தனியாா் பேருந்துகளின் கட்டண உயா்வு குறித்து வரும் டிச.30-ஆம் தேதிக்குள் முடிவெடுத்து, அதுதொடா்பான அறிக்கையை ஜன.5-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.