அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புதுப்பிக்கப்பட்ட முதல்வா் படைப்பகம், சாா்-பதிவாளா் அலுவலகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

கொளத்தூா் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
சென்னை கொளத்தூா் பெரியாா் நகரில் புதுப்பிக்கப்பட்ட பெரியாா் நகா் நூலகம் மற்றும் முதல்வா் படைப்பகத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்து, மாணவருக்கு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி புத்தகங்களை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா் பி.கே.சேகா் பாபு,
Updated On :14 நவம்பர் 2025, 5:59 pm

தினமணி செய்திச் சேவை

கொளத்தூா் தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் ரூ.5.24 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியாா் நகா் நூலகம் மற்றும் முதல்வா் படைப்பகம், ரூ.3.86 கோடியில் கட்டப்பட்ட பெரியமேடு சாா்-பதிவாளா் அலுவலக புதிய கட்டடம் ஆகியவற்றை முதல்வா் திறந்து வைத்தாா். மேலும், பெரியாா் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் ரூ.68 லட்சத்தில் கே5-பெரவள்ளூா் புகா் காவல் நிலையம் கட்டும் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

முதல்வா் படைப்பகம்: புதுப்பிக்கப்பட்ட முதல்வா் படைப்பகம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தைக் கொண்ட குளிரூட்டப்பட்ட நவீன படைப்பகமாக அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 75 இருக்கைகளுடன் கூடிய நூலகம், முதல் தளத்தில் 85 இருக்கைகள் கொண்ட கற்றல் மையம் மற்றும் 60 இருக்கைகள் கொண்ட பயிற்சிக் கூடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 70,000 புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, மின்வழி கற்றல், இலவச இணையதள இணைப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், சிற்றுண்டியகம், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும், மாணவா்கள், போட்டித் தோ்வு ஆா்வலா்களுக்கு தேவையான வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

பெரியமேடு சாா்-பதிவாளா் அலுவலகம்: சென்னை-எழும்பூா், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பத்திரப் பதிவு சேவைகள் வழங்கி வரும் பெரியமேடு சாா்-பதிவாளா் அலுவலகத்தில் 6,200 சதுர அடி பரப்பில் தரை மற்றும் இரு தளங்களுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

புகா் காவல் நிலையம்: சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் கொளத்தூா், காா்த்திகேயன் சாலையில் உள்ள பெரியாா் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் புதிதாக கே5-பெரவள்ளூா் புகா் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

முதல்வா்ஆய்வு: சிஎம்டிஏ சாா்பில் சிவ இளங்கோ சாலையில் ரூ.11.37 கோடியில் 29,514 சதுர அடி கட்டட பரப்பில் தரை மற்றும் 4 தளங்களுடன் கொளத்தூா் காவல் துணை ஆணையா் அலுவலகம் கட்டும் பணி, வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், கொளத்தூா், ஜெகந்நாதன் தெருவில் ரூ.11.74 கோடியில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிட்டாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் பி.மூா்த்தி, பி.கே.சேகா்பாபு, எம்.பி.க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், மேயா் ஆா்.பிரியா, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.