ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோயம்பேடு சந்தையில் தக்காளி ரூ.50! ஆண்டிபட்டியில் ரூ.10!!

மழையால் வரத்து குறைந்ததால் கோயம்பேடு சந்தையில் தக்காளி ரூ.50க்கும் வாங்குவோர் இன்றி ஆண்டிபட்டியில் ரூ.10க்கும் விற்பனை

News image
விற்பனைக்கு வந்திருக்கும் தக்காளி
Updated On :23 அக்டோபர் 2025, 7:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தொடர் கனமழை காரணமாக வரத்துக் குறைந்து சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில்லறை விற்பனையில் ரூ.70 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தக்காளி விலை அதிகரித்திருக்கும் அதே நாளில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தக்காளி வாங்கிச் செல்வோர் குறைந்ததால் விலை ரூ.10 ஆக சரிந்துள்ளது.

இதனால், அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து தக்காளியை ஆண்டிபட்டி சந்தைக்குக் கொண்டு வராமல் விவசாயிகள் சாலை மற்றும் குளங்களில் தக்காளியை கொட்டிச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது.

பல்வேறு மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை தாக்கம் காரணமாக தோட்ட பயிர்களான தக்காளி கேரட் உள்ளிட்டவைகள் வரத்து காய்கறி சந்தைகளுக்கு வெகுவாக குறைந்தது.

இந்நிலையை காஞ்சிபுரம் ராஜாஜி சந்தையில் நேற்று தக்காளி பத்து ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 30 மற்றும் 40 ரூபாய்களில் விற்கப்படுகிறது.

இதேபோல் ஒரு கிலோவிற்கு கேரட் 60 ரூபாய், அவரை 60 ரூபாய், முருங்கை 120 என விற்கப்படுகிறது. இதைத் தவிர மற்ற காய்கறி விலைகள் அனைத்தும் சற்று உயர்ந்துள்ளது. திடீரென தக்காளி விலை உயர்ந்துள்ளதால், சந்தைக்கு வரும் மக்கள், மேலும் விலை உயருமோ என்ற அச்சத்தில் அதிகப்படியான தக்காளியினை வாங்கிச் சென்று வருகின்றனர்.

summary

Due to reduced supply due to rain, tomatoes are being sold for Rs. 50 in Koyambedu market with no buyers, and are being sold for Rs. 10 in Andipatti.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.