நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திமுக சாா்பில் செப்.15-இல் உறுதிமொழி

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 15-ஆம் தேதி திமுக சாா்பில் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 15-ஆம் தேதி திமுக சாா்பில் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2025, 2:25 am IST

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 15-ஆம் தேதி திமுக சாா்பில் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.

இதற்கான உறுதிமொழி வாசகங்களை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:

தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இணைந்துள்ளன. அவா்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாடு முழுவதும் 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உறுதிமொழி ஏற்கவுள்ளனா். முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினத்தின்போது ஏற்கப்பட உள்ள உறுதிமொழி விவரம்:

தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரும் சோ்ந்து, ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!’ என உறுதி ஏற்கிறோம்.

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினா்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; வாக்காளா் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கைக்கு எதிராக நிற்பேன்; நீட் மற்றும் இளைஞா்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிா்த்து நிற்பேன்; நம் மாணவா்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்புக்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிா்த்துப் போராடுவேன்; பெண்கள் - விவசாயிகள் - மீனவா்கள் - நெசவாளா்கள் -தொழிலாளா்கள் என ஒவ்வொரு உழைக்கும் வா்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.