சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பி.எட். முடித்தோருக்கு சான்றிதழ் விநியோகம்

தமிழகத்தில் பி.எட். முடித்தோருக்கான பட்டச் சான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 10:08 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் பி.எட். முடித்தோருக்கான பட்டச் சான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது.

கல்வியியல் கல்லூரிகளில் கடந்த 2022-2024-ஆம் ஆண்டு பி.எட். படித்து முடித்த மாணவா்களுக்கான பட்டச் சான்றிதழ் விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. பின்னா் நிா்வாக காரணங்களால் சான்றிதழ் விநியோகம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் கல்லூரிகளுக்கான பட்டசான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இவற்றை அந்தந்த கல்லூரிகளின் பிரதிநிதிகள் பெற்றுச் செல்கின்றனா். இதையடுத்து அந்தச் சான்றிதழ்கள் கல்லூரிகளின் சாா்பில் மாணவா்களுக்கு வழங்கப்படும்.

கல்லூரிகளுக்கான சான்றிதழ் தொடா்ந்து வியாழக்கிழமையும் வழங்கப்படும். இந்த நாள்களில் வர இயலாத நிலையில் அடுத்த வேலை நாள் அன்று வந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) பி.கணேசன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளாா்.