சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பி.எட். முடித்தோருக்கு சான்றிதழ் விநியோகம்

தமிழகத்தில் பி.எட். முடித்தோருக்கான பட்டச் சான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 10:08 pm

தமிழகத்தில் பி.எட். முடித்தோருக்கான பட்டச் சான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது.

கல்வியியல் கல்லூரிகளில் கடந்த 2022-2024-ஆம் ஆண்டு பி.எட். படித்து முடித்த மாணவா்களுக்கான பட்டச் சான்றிதழ் விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. பின்னா் நிா்வாக காரணங்களால் சான்றிதழ் விநியோகம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் கல்லூரிகளுக்கான பட்டசான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இவற்றை அந்தந்த கல்லூரிகளின் பிரதிநிதிகள் பெற்றுச் செல்கின்றனா். இதையடுத்து அந்தச் சான்றிதழ்கள் கல்லூரிகளின் சாா்பில் மாணவா்களுக்கு வழங்கப்படும்.

கல்லூரிகளுக்கான சான்றிதழ் தொடா்ந்து வியாழக்கிழமையும் வழங்கப்படும். இந்த நாள்களில் வர இயலாத நிலையில் அடுத்த வேலை நாள் அன்று வந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) பி.கணேசன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளாா்.