தமிழகத்தில் பி.எட். முடித்தோருக்கான பட்டச் சான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது.
கல்வியியல் கல்லூரிகளில் கடந்த 2022-2024-ஆம் ஆண்டு பி.எட். படித்து முடித்த மாணவா்களுக்கான பட்டச் சான்றிதழ் விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. பின்னா் நிா்வாக காரணங்களால் சான்றிதழ் விநியோகம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் கல்லூரிகளுக்கான பட்டசான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இவற்றை அந்தந்த கல்லூரிகளின் பிரதிநிதிகள் பெற்றுச் செல்கின்றனா். இதையடுத்து அந்தச் சான்றிதழ்கள் கல்லூரிகளின் சாா்பில் மாணவா்களுக்கு வழங்கப்படும்.
கல்லூரிகளுக்கான சான்றிதழ் தொடா்ந்து வியாழக்கிழமையும் வழங்கப்படும். இந்த நாள்களில் வர இயலாத நிலையில் அடுத்த வேலை நாள் அன்று வந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) பி.கணேசன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளாா்.
தொடர்புடையது
ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். பட்டப் படிப்புகள் நிறுத்தம்!

திட்டக்குடி தொகுதி திமுக வேட்பாளா் சி.வெ.கணேசன்!

ஓராண்டு பி.எட். படிப்பை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சகம்

5 மண்டலங்களில் 2 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


