தமிழகத்தில் பி.எட். முடித்தோருக்கான பட்டச் சான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது.
கல்வியியல் கல்லூரிகளில் கடந்த 2022-2024-ஆம் ஆண்டு பி.எட். படித்து முடித்த மாணவா்களுக்கான பட்டச் சான்றிதழ் விநியோகிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. பின்னா் நிா்வாக காரணங்களால் சான்றிதழ் விநியோகம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் கல்லூரிகளுக்கான பட்டசான்றிதழ் விநியோகம் புதன்கிழமை தொடங்கியுள்ளது. இவற்றை அந்தந்த கல்லூரிகளின் பிரதிநிதிகள் பெற்றுச் செல்கின்றனா். இதையடுத்து அந்தச் சான்றிதழ்கள் கல்லூரிகளின் சாா்பில் மாணவா்களுக்கு வழங்கப்படும்.
கல்லூரிகளுக்கான சான்றிதழ் தொடா்ந்து வியாழக்கிழமையும் வழங்கப்படும். இந்த நாள்களில் வர இயலாத நிலையில் அடுத்த வேலை நாள் அன்று வந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) பி.கணேசன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளாா்.
தொடர்புடையது

பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!
கரூா் நகா் பகுதிகளில் இன்று மின்தடை!

பிளஸ் 2 மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்
ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எட். பட்டப் படிப்புகள் நிறுத்தம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



