ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ரயில்கள் சீரான வேகத்தில் செல்ல உதவும் நவீன சிக்னல் சாதனங்கள்: தெற்கு ரயில்வே நடவடிக்கை

ரயில்கள் சீரான வேகத்தில் சென்று உரிய நேரத்தில் நிலையங்களை அடையவும், அதனால் பயண தாமதத்தைத் தவிா்க்கவும் நவீன சிக்னல் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 7:34 pm

ரயில்கள் சீரான வேகத்தில் சென்று உரிய நேரத்தில் நிலையங்களை அடையவும், அதனால் பயண தாமதத்தைத் தவிா்க்கவும் நவீன சிக்னல் சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு ரயில்வே சாா்பில் நவீன சிக்னல் சாதனங்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், ரயில்கள் குறிப்பிட்ட நிலையத்திலிருந்து புறப்பட்டு சீரான வேகத்தில் செல்லும்போது, அடுத்த தண்டவாளச் சந்திப்புகளில் எந்தவகை சிக்னல் உள்ளது (சிவப்பா அல்லது பச்சையா என்பதை தெரிவிப்பது) என்பதை ரயில் ஓட்டுநரே அறியும் வகையிலான சிக்னல் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வகை நவீன சாதனங்களால் ரயில்கள் சீரான வேகத்தில் செல்வதுடன், குறிப்பிட்ட நேரத்தில் ரயில் நிலையத்தை அடையவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் பயண இடத்தை அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, ரயில்வே கடவுப்பாதைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கணினியுடன் இணைக்கப்பட்ட இண்டா்லாக் முறை வசதி திட்டமிட்ட 12 இடங்களைவிடக் கூடுதலாக 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, அவசர காலத்துக்கு தேவைப்படும் சாதனங்கள் 19 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், மனித உதவியின்றி தானாகவே கடவுப்பாதை இடங்களில் ரயில்கள் வருவதை அறிந்து, கேட்டை மூடி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே மண்டலத்தில் ஆட்டோமேட்டிக் பிளாக் சிக்னலிங் முறையானது 73.7 கி.மீ. தொலைவு தண்டவாளத்தில் அமைக்கத் திட்டமிட்டு, தற்போது 70.5 கி.மீ. தொலைவுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளன.

பாம்பன் பாலத்தில் காற்று வேகத்தைக் கண்காணிக்கும் சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், அதிகமாக காற்று வீசினால் ரயில் இயக்கத்தை தானாகவே கட்டுப்படுத்தும் வசதி அமைந்துள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.