பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்

நெல்லையில் அமமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 20 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை

TTV Dinakaran

டிடிவி தினகரன் - கோப்புப் படம்

Published On :

அமமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 20 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியில் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி முத்துவின் அலுவலகத்தில் பணம் வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறைக்கு பறக்கும் படையினரால் தகவல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், சோதனையின்போது ரூ. 20.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பான இடங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை மீது அவர் குற்றம் சாட்டினார். இருப்பினும், அவரது குற்றச்சாட்டுகளுக்கு வருமான வரித்துறை மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை செய்தது தொடர்பான முழு ஆதாரங்களையும் ஏப்ரல் 24-ல் வெளியிடுவதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Summary

Nellai: Income Tax Department Raids AMMK Office

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.