40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

யார் ஆட்சிக்கு வந்தாலும்... வாக்களித்த பிறகு சிவகுமாரின் ஒரே கோரிக்கை!

தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என நடிகர் சிவகுமார் கோரிக்கை...

News image

வாக்களித்த சிவகுமார் - எக்ஸ்

Updated On :23 ஏப்ரல் 2026, 10:16 am IST

தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுக்கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என நடிகர் சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சிவகுமார் சென்னையில் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் சிவகுமார் பேசியதாவது:

''தமிழ்நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் முன்வைப்பது ஒரே கோரிக்கைதான். யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். குடி மக்களை குடிகார மக்களாக ஆக்கியுள்ளது டாஸ்மாக்.

மதுபானத்தால் தமிழ்நாட்டில் பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 சதவிகிதத்திற்கும் மேலான குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன'' எனக் கோரிக்கை வைத்தார்.

Summary

TN Election 2026 actor Sivakumar's sole request after casting his vote

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.