தவெக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபா ஆகியோர் வாக்களித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள காமராஜ் அவென்யூ அரசுப் பள்ளியில் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் அவரது தாயும் பாடகியுமான ஷோபா ஆகியோர் வாக்களித்தனர்.
விஜய் வழக்கமாக அணியும் வெள்ளை நிற உடை அணிந்து வாக்களிக்க தவெகவினர் வலியுறுத்திய நிலையில், விஜய்யின் பெற்றோரும் வெள்ளை நிற உடையில் வந்து வாக்களித்தனர்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியதாவது:
”தேர்தல் அமைதியாக நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தனது தொழிலை விட்டுவிட்டு எனது மகன் சமூகத்துக்காக சேவை செய்வதற்கு வந்துள்ளார். மக்கள் முடிவெடுப்பார்கள். இதுவரை வாக்களிக்காத இளைஞர்கள்கூட வாக்களித்து வருகிறார்கள்.
அரசியலில் ஆர்வம் இல்லாதவர்கள்கூட இந்த முறை அரசியலை கற்றுக் கொள்ள நினைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
Summary
TVK leader Vijay's father—director S.A. Chandrasekhar—and his mother, Shoba, cast their votes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எல்லா தந்தைக்கும் இது கிடைப்பதில்லை: எஸ்.ஏ. சந்திரசேகர் நா தழுதழுக்க பேச்சு
எதிர்பார்ப்புகளைக் கடந்து விஜய் வெற்றி : எஸ்.ஏ. சந்திரசேகர்

தமிழக முதல்வராக விஜய் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்! எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி







