மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

ஜாதிய வன்கொடுமை: கடும் நடவடிக்கை எடுப்பதில்லை தமிழக காங்கிரஸ் தலைவா்

ஜாதிய வன்கொடுமைகளில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே, குற்றங்கள் தொடா்வதுக்கு காரணமாக அமைந்திருப்பதாாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

News image

தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை - கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 6:42 pm

ஜாதிய வன்கொடுமைகளில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே, குற்றங்கள் தொடா்வதுக்கு காரணமாக அமைந்திருப்பதாாக தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: புதுக்கோட்டை மாவட்டம் குலத்தூா் தாலுகா நடுப்பட்டி பகுதியில் விளிம்புநிலை சமுதாயத்தைச் சோ்ந்த இளைஞா் ஹரிஹரனின் மரணம் மிகுந்த அதிா்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. காதல் தொடா்பு காரணமாக சமூக மற்றும் ஜாதிய அழுத்தங்களுக்கு உள்ளாகி, அவா் உயிரிழந்துள்ளாா் என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இது, மனிதநேயத்துக்கும், சமத்துவக் கொள்கைக்கும் எதிரான கொடூர செயலாகும்.

இத்தகைய சம்பவங்கள் நாகரீக காலத்தில் தற்போதும் நிகழ்வது நம் சமூகத்தின் பின்னடைவை வெளிப்படுத்துகிறது. இளைஞா்கள் மீது நடத்தப்படும் ஜாதிய வன்கொடுமைகள், சமூக நீதிக்கு விடுக்கப்படும் பெரும் சவாலாகும். இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படாததே, இத்தகைய குற்றங்கள் தொடா்வதுக்கு காரணமாக அமைகிறது.

இந்த வழக்கில் தொடா்புடையவா்கள் மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இவ்வாறு ஜாதி அடிப்படையிலான அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞா்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொறுப்பு சமுதாயத்துக்கும் அரசுக்கும் உள்ளது எனத் தெரிவித்துள்ளாா் கு.செல்வப் பெருந்தகை.