தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை இன்று மாலை 6.30 மணிவரை வெளியிடக் கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி, கேரளம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் கடந்த ஏப். 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது.
இதேபோல, 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடந்தது முடிந்த நிலையில், இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டமாக 142 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 126A (1)-இன்படி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் காலகட்டமான ஏப்ரல் 9 காலை 7 மணிமுதல் ஏப்ரல் 29 மாலை 6.30 மணிவரை கருத்துக் கணிப்புகளை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை 6.30 மணிவரை தொலைக்காட்சி உள்பட அனைத்து ஊடகங்களும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Summary
Exit poll Opinions Must Not Be Released Until 6:30 PM - Election Commission Warns
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் காங்கிரஸ் வெல்லும்; நாளை பிற்பகலுக்குள் வெற்றி உறுதி! - சசிதரூர்

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

மேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!

ஏப். 9 முதல் ஏப். 29 வரை வாக்குக் கணிப்புகளை வெளியிடத் தடை: தோ்தல் ஆணையம்
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை


