தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2025-இல் 23,407 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அதில், 12 போ் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்த நிலையில், தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் 4 வகை டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. எனவே, தமிழக அரசு டெங்கு பாதுகாப்பு குறித்த அதிகாரபூா்வ மருத்துவ வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தொடா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணிநேரமும் காய்ச்சல் சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டும். கிராமம் முதல் பெருநகரம் வரை டெங்கு பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரக்கோணத்தில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த ரூ. 26.9 லட்சம்: நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானம்

காவிரி பிரச்னை; இரு மாநில முதல்வா்கள் பேச்சுவாா்த்தை நடத்துவது வரவேற்கத்தக்கது: ஜி.கே. வாசன்

நிகழாண்டில் 9,250 பேருக்கு டெங்கு: மூவா் உயிரிழப்பு

மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக அரசு தடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



