வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் ஆர். வினோத் இன்று (ஆக.6) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் சுமார் 130 நிமிடங்கள் வாசித்தார்.
பல்வேறு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், தவெக அரசின் வாக்குறுதிகளாக 100 சதவிகித பயிர்க்கடன் தள்ளுபடி, கரும்புக்கான ஆதார விலை ரூ. 4,500 ஆக உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், வேளாண் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக வேளாண் பட்ஜெட்டை தவெக அரசு தாக்கல் செய்திருக்கிறது. விவசாயிகள் எல்லாம் வேளாண் பட்ஜெட்டுக்காக பெரும் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். ஆனால், இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது.
கடந்த கால திமுக ஆட்சியில் வேளாண் பட்ஜெட் என்று அறிவிக்கப்பட்டு, 20 துறைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வேளாண் பட்ஜெட் என்று தாக்கல் செய்தார். வேளாண் அமைச்சர் சுமார் இரண்டரை மணிநேரம் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். அதில், முக்கியமாக எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை.
விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய திட்டம் எதுவும் இல்லை. ஏற்கனெவே, ஒவ்வொரு ஆண்டும் வேளாண் மானியக் கோரிக்கை நடைபெறுகின்ற போது என்ன அறிவிப்பு இருந்ததோ, அதேதான் வேளாண் பட்ஜெட்டிலும் இடம்பெற்றிருக்கிறது. திமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, தவெக அரசு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. புதியதாக எதுவுமே இல்லை.
தேர்தல் நேரத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3,500 தருவதாகவும், ஒரு டன் கரும்புக்கு ஆதார விலையாக ரூ. 4,500 தருவதாகவும் தெரிவித்திருந்தார்கள். சாகுபடியாளர் உரிம அட்டை மூலம், குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 நேரடி முதலீட்டு உதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆனால், அதுதொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இனிக்க, இனிக்க பேசி விவசாயிகளை ஏமாற்றிவிட்டது தவெக அரசு” என்றார்.
Summary
AIADMK General Secretary Edappadi Palaniswami has stated that the agriculture budget has left farmers with nothing but deep disappointment.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உள்ளாட்சித் தோ்தலில் இளைஞா்களுக்கு முக்கியத்துவம்: எடப்பாடி பழனிசாமி

குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தைவிட்டு விலகுகிறதா ஹூண்டாய்? முதலீட்டை உறுதிசெய்ய தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
இபிஎஸ் நடத்தி வருவது ஒரு கார்ப்பரேட் கம்பெனி: செங்கோட்டையன்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



