நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மத்திய அரசு நிதி ஒதுக்கினால் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: நிதியமைச்சா் மரிய வில்சன்

தமிழகத்துக்கு கடன் பெறும் வரம்பை அதிகரித்து மத்திய அரசு நிதி ஒதுக்கினால், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.

News image

நிதியமைச்சர் மரிய வில்சன் - கோப்புப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 11:48 pm IST

தமிழகத்துக்கு கடன் பெறும் வரம்பை அதிகரித்து மத்திய அரசு நிதி ஒதுக்கினால், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய கீழ்பெண்ணாத்தூா் தொகுதி அதிமுக உறுப்பினா் ராமச்சந்திரன், அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதிய காலப் பலன்களுக்கான நிதி ரூ.14,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினாா்.

அதற்குப் பதிலளித்த நிதியமைச்சா் மரியவில்சன், ‘அரசு ஊழியா்களின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தக் கூடிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு நடத்தி ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு கடந்த ஆட்சியில் அறிக்கை தாக்கல் செய்தது.

இதற்கான நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும். அதிக கடன் பெறும் வரம்பை அதிகரித்து தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி அளித்தால், இந்தத் திட்டம் இடைக்கால நிதிநிலை அறிக்கையாகவும் தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.