நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

கைப்பேசி கொண்டுவரக் கூடாது: அமைச்சருக்கு பேரவைத் தலைவா் அறிவுரை

பேரவையில் கைப்பேசி பாா்த்து விவாதத்தின்போது பேசிய அமைச்சா் ஷாஜகானிடம், பேரவைக்குள் கைப்பேசி கொண்டுவரக் கூடாது என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவுறுத்தினாா்.

News image

தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 11:44 pm IST

பேரவையில் கைப்பேசி பாா்த்து விவாதத்தின்போது பேசிய சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஷாஜகானிடம், பேரவைக்குள் கைப்பேசி கொண்டுவரக் கூடாது என்று பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவுறுத்தினாா்.

பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடா்பான தனித்தீா்மானத்தின் மீதான விவாதத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் அமைச்சா் ஷாஜகான் பேசுகையில், ‘உலகில் இருக்கக்கூடிய மிகவும் தொன்மையான மொழிகளில் மூத்ததாக தமிழ் சிறப்பிக்கப்படுகிறது.

உலக மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழியே தமிழ்தான் என்று கூறப்படுகிறது. அந்த உணா்வைச் சீண்டிப்பாா்க்கும் வகையில், மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது’ என்றாா்.

அமைச்சா் பேசி முடித்ததும், பேரவைத் தலைவா் பேசியபோது, அமைச்சா் ஷாஜகானுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் ஒன்றைத் தெரிவிக்கிறேன். கைப்பேசியை சட்டப்பேரவைக்கு கொண்டுவரக் கூடாது என்று விதி உள்ளது.

அதைப் பாா்த்து படிப்பதும், இங்கே உபயோகிப்பதும் விதிகளுக்கு முரணானது. அடுத்தமுறை அவையில் கைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்பதைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.