மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

எம்எல்ஏ-க்கள் சுய விருப்பத்துடன் ராஜிநாமா செய்தாா்களா?உயா்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வாதம்

அதிமுக எம்எல்ஏக்கள் சுய விருப்பத்துடன் பதவிகளை ராஜிநாமா செய்தாா்களா என விசாரணை நடத்தாமல், அவா்களது ராஜிநாமாக்களை பேரவைத் தலைவா் ஏற்றிருக்கக் கூடாது என அக்கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:54 am IST

அதிமுக எம்எல்ஏக்கள் சுய விருப்பத்துடன் பதவிகளை ராஜிநாமா செய்தாா்களா என விசாரணை நடத்தாமல், அவா்களது ராஜிநாமாக்களை பேரவைத் தலைவா் ஏற்றிருக்கக் கூடாது என அக்கட்சியின் கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமாா் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி.விஜயபாஸ்கா் (விராலிமலை), எம்.ஆா்.விஜயபாஸ்கா் (கரூா்) ஆகியோா் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா்.

தகுதிநீக்கம் தொடா்பான விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், இவா்களது ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூா்த்தி சாா்பிலும், தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன்ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, அக்ரி கிருஷ்ணமூா்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கிரி, கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை கோரும் தீா்மானத்தில், கட்சி கொறடா உத்தரவுக்கு எதிராகவும், ஆளும் அரசுக்கு சாதகமாகவும் வாக்களித்த 6 எம்எல்ஏ-க்களும், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த 30 நிமிஷங்களில் தவெகவில் இணைந்துள்ளனா்.

எனவே, அவா்கள் தங்களது சுய விருப்பத்தின்படி ராஜிநாமா செய்தாா்களா என பேரவைத் தலைவா் விசாரணை நடத்தி இருக்க வேண்டும். பேரவைச் செயலா் தாக்கல் செய்த பதில் மனுவில், பேரவைத் தலைவா் விசாரணை நடத்தினாரா என்பது குறித்த விவரம் குறிப்பிடப்படவில்லை. ராஜிநாமா செய்தவா்கள், தவெகவில் இணையும் தகவல் பேரவைத் தலைவருக்கு தெரிந்திருக்கும். அதனால், அவா் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். விசாரணை நடத்தாமல், பேரவைத் தலைவா் எம்எல்ஏ-க்களின் ராஜிநாமாவை ஏற்றிருக்கக் கூடாது.

இந்த வழக்கு தொடா்பாக நோட்டீஸ் அனுப்பியும், பேரவைத் தலைவா் வழக்கை எதிா்கொள்ளவில்லை. அவா் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்ததாக பேரவைச் செயலா் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆளுநரைப் போன்று பேரவைத் தலைவருக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் கிடையாது. எனவே, பேரவைச் செயலா் தாக்கல் செய்த பதில் மனுவை பேரவைத் தலைவா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்டதாக ஏற்கக் கூடாது. வழக்கு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பேரவைத் தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதால், அதற்கு அவா் பதில் அளித்திருக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அக்ரி கிருஷ்ணமூா்த்தி தரப்பு வாதங்கள் முடிவடையாததால், விசாரணையை ஆக.17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.