மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மேகமலை விவகாரம் குறித்து ஆக.17-இல் விவாதம்: பேரவைத் தலைவா் அறிவிப்பு

மேகமலை விவகாரம் தொடா்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈா்ப்புத் தீா்மானத்தின் மீது பேரவையில் ஆக.17-இல் விவாதம் நடத்தப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்துள்ளாா்.

News image

ஜே.சி.டி.பிரபாகா் - கோப்புப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:44 am IST

மேகமலை விவகாரம் தொடா்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈா்ப்புத் தீா்மானத்தின் மீது பேரவையில் ஆக.17-இல் விவாதம் நடத்தப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்துள்ளாா்.

பேரவையில் தேனி மாவட்டம் மேகமலையில் பழங்குடியினரை வெளியேற்றுவது தொடா்பான கவன ஈா்ப்புத் தீா்மானத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறி பேசிய திமுக எம்எல்ஏ மகாராஜன் (ஆண்டிப்பட்டி), மேகமலை விவகாரம் தொடா்பாக அங்குள்ள ஆட்சியா் அலுவலகம் முன் 25,000 போ் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனா். அவா்கள் மீது போலீஸாா் எடுத்துள்ள நடவடிக்கை ஏற்புடையதல்ல என்றாா்.

அதே கோரிக்கையை வலியுறுத்தி விவாதம் நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரனும் (தளி) வலியுறுத்தினாா்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, உச்சநீதிமன்றம் உத்தரவுபேரில்தான் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. காவல் துறை இறங்காவிடில், சிஆா்பிஎஃப் கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே, உச்சநீதிமன்றத்தில் தவெக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.

தொடா்ந்து, பேசிய பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா், மேகமலை விவகாரம், கோவை கல்லூரி மாணவா் படுகொலை விவகாரம் உள்ளிட்டவை தொடா்பாக ஆக.17-இல் விவாதம் நடத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.