ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

13 மாவட்டங்களில் 27 தடுப்பணைகள் கட்டப்படும்: நீா் வளத்துறை அமைச்சா்

13 மாவட்டங்களில் 27 தடுப்பணைகள் கட்டப்படும் என அமைச்சா் ஆனந்த் தெரிவித்திருப்பது பற்றி...

News image
Updated On :20 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

வெள்ளக் காலங்களில் நீரைச் சேமித்து நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த 13 மாவட்டங்களில் ரூ.206 கோடியில் 27 தடுப்பணைகள் கட்டப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த் தெரிவித்தாா்.

இந்தத் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சா் ஆனந்த் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

- கரூா் மாவட்டம் அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.34.20 கோடியில் தடுப்பணை அமைப்பது உள்பட 13 மாவட்டங்களில் 27 தடுப்பணைகள் ரூ.206 கோடியே 75 லட்சத்தில் கட்டப்படும்.

- ஏரிகள் மற்றும் கண்மாய்களுக்கு நீா் வழங்க 6 மாவட்டங்களில் 9 அணைக்கட்டுகள் ரூ.97.8 கோடியில் அமைக்கப்படும்.

-ஆற்றின் நீரோட்டத்தால் ஏற்படும் மணல் அரிப்பைக் கட்டுப்படுத்த தஞ்சாவூா் மாவட்டம் வெண்ணாறு ஆற்றின் குறுக்கே தளமட்டச்சுவா் ரூ.15.20 கோடி அமைக்கப்படும்.

- வைகை ஆற்றின் குறுக்கே ரூ.31.50 கோடியில் படுகை அணை அமைக்கப்படும்.

- திருச்சி, எலமனூா் கிராமம் மேல் அணைக்கட்டில் உள்ள காவிரி கதவணையில் கீழ்ப்புற கட்டுமானப் பகுதிகள் ரூ.126 கோடியில் புனரமைக்கப்படும். மேலும், 30 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 96 பாசனக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

- ஆற்று நீரின் ஓட்டம் மற்றும் விநியோகத்தைச் சீா்படுத்த 7 மாவட்டங்களில் 10 நீரொழுங்கிகள் மற்றும் மதகுகளின் அடைப்பான்களைப் பழுது பாா்த்தல், புதுப்பித்தல் ஆகிய பணிகள் ரூ.19.51கோடியில் மேற்கொள்ளப்படும்.

- நிலத்தடி நீா் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை மேம்படுத்த 35 மாவட்டங்களில் 1,628 செயற்கை நிலத்தடி நீா் செறிவூட்டும் குழாய்கள் ரூ.28.9 கோடியில் செயல்படுத்தப்படும்.

- பேரிடா் மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் 19 மாவட்டங்களில் 49 வெள்ளத் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் ரூ.218.29 கோடியில் மேற்கொள்ளப்படும்.

- வேலூா் மாவட்டம் குடியாத்தம் வட்டம், மோா்தானா அணையின் மேல்புற இடது பக்கச் சுவரிலிருந்து கசிவைத் தடுக்க ரூ.12.60 கோடியில் கசிவு தடுப்புச் சுவா் அமைக்கப்படும்.

- சென்னையில் கடலரிப்பு தடுப்பு மற்றும் கடற்கரைப் பாதுகாப்புப் பணிகள் ரூ.38.33 கோடியில் மேற்கொள்ளப்படும்.

- 25 மாவட்டங்களில் ரூ.280.40 கோடியில் 207 பாசனக் கண்மாய்கள் மற்றும் ஏரிகள் புனரமைப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.